Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

குழந்தையைப் பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்க சீனா முயற்சி!

ஆகஸ்ட் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீன விஞ்ஞானிகள் மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘ரோபோட்டிக்’ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சீனா அண்மையில், ரோபோக்களுக்கான பிரத்யேக வணிக வளாகமொன்றை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், சீனாவின் குவாங்சோவைச் சேர்ந்த ‘கைவா டெக்னாலஜி’ நிறுவனம் கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் திறன் உடைய ரோபோவை உருவாக்கும் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஜாங் கிபெங் தலைமை தாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் வெற்றிபெற்றால், மலட்டுத்தன்மை உள்ள தம்பதியர் அல்லது உயிரியல் கர்ப்பத்தை விரும்பாதவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து விஞ்ஞானி ஜாங் கிபெங் கூறுகையில், “இந்த தொழில்நுட்ப ஆய்வு தற்போது மேம்பட்ட நிலையில் உள்ளது. ரோபோவின் வயிற்றில் செயற்கை கருப்பையை பொறுத்தி, செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்யப்படும். கரு அதில் வளரும். இந்த ரோபோவின் மாதிரி அடுத்த ஆண்டு அறிமுகமாகும்,” என்றார்.

இந்த தொழில்நுட்பம், 2017ல் செயற்கை கருப்பை திரவத்துடன் கூடிய, ‘பயோபேக்’ மூலம் ஆடுகள் கருவிலிருந்து வளர்க்கப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மும்பையில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது!
அடுத்த செய்தி நானு ஓயா கோவிலில் உண்டியலை உடைத்து திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

டெலிகிராம் செயலி மீது அவுஸ்திரேலிய அரசு வழக்குத் தாக்கல்

ஜூலை 30, 2026
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்(VIDEO)

ஆகஸ்ட் 8, 2025
உலகம்

ஹமாஸிடமிருந்த 4 பணயக்கைதிகளின் உடலங்கள் இஸ்ரேலிடம் ஒப்படைப்பு!

அக்டோபர் 14, 2025
உலகம்

பாகிஸ்தானில் புகையிரதநிலையத்தில் குண்டுவெடிப்பு.

நவம்பர் 9, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?