பாகிஸ்தானுக்கு ஹங்கர் வகை நீர்மூழ்கிக் கப்பலொன்றை சீனா வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் கடற்படையின் வலிமையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு சீனாவால் வழங்கப்பட்டுள்ள ஹங்கர் வகை மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும்.
சீனாவின் வுஹானில் உள்ள ஷுவாங்லியு தளத்தில் உள்ள வுச்சாங் கப்பல் கட்டும் கைத்தொழில் நிறுவனத்தில் கட்டப்பட்ட இந்நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தான் பிரதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அப்துல் சமத் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கடற்படையை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் எட்டு ஹங்கர் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு சீன கப்பல் கட்டும் நிறுவனத்துடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் கைச்சார்த்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவில் கட்டப்படுவதோடு ஏனைய நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களும் பாகிஸ்தானில் கராச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் தொழில்நுட்ப பரிமாற்ற திட்டத்தின் கீழ் கட்டப்படும்.
தற்போது சீனா மூன்றாவது வகை நீர்மூழ்கிக் கப்பலை கையளித்துள்ளது.
