பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் இறுதிச் சடங்கில் பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியம் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் பண்டிகையன்று பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 வயதில் காலமானார். தன்னுடைய பணிவு மற்றும் பரந்த பின்னணி மற்றும் நம்பிக்கைகளைக் கொண்ட மக்களுக்கான முயற்சிகளுக்காக அறியப்பட்டவராக பாப்பரசர் பிரான்சிஸ் விளங்கினார்.
அவரது இறுதிச் சடங்கு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த இறுதிச் சடங்கு குறித்த அறிவித்தலை வத்திக்கான் திருச்சபை விடுத்துள்ளமை
குறிப்பிடத் தக்கது.
