வவுனியாவில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி நேற்று இரவு ஒருவர் பலியாகியுள்ளார்.
நேற்றயதினம் இரவு பெரியதம்பனை பகுதியில் மோட்டார் சைக்கிளில், பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை வீதியில் நின்ற காட்டு யானை தாக்கியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . சம்பவத்தில் நட்டாங்கண்டல் பிரதேசத்தை சேர்ந்த ச.உதயராசா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது சடலம் பெரிய பண்டிபிரிச்சான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பறையநாலன்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
