மாத்தளை – கைகாவல பகுதியில் தனியார் பேருந்தொன்று மோதியதில் கிராம உத்தியோத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தொழிலுக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் மாத்தளை – ரத்தோட்டை கைகாவல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கிராம உத்தியோகத்தர் என்பது தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
