நுவரெலியாவில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனரத்தம் ஏற்பட்டுள்ளது .
இன்றைய தினம் காலை முதல் பெய்து வரும் கடுமையான மழையினாலே இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் வெள்ள நீர் வீதியினை கடந்து செல்வதனால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது
இதனால் போக்குவரத்தை மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் செல்வோரும் கடுமையாக பாதித்து வருகின்றனர் .
இப்பகுதியில் கால்வாய்கள் முறையாக புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படாததன் காரணமாக அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர் .
