போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைதுசெய்யப்பட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சந்தேகநபருக்கு கல்கிஸ்ஸை சட்டத்தரணிகள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.
2024 மே மாதம், 3,200 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்ததாகக் சந்தேகத்தினடிப்படையில், தெஹிவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், மூன்று மாத விளக்கமறியலுக்குப் பின் உயர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், நீண்டகால தடுப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
நேற்றைய விசாரணையில், அரசு பகுப்பாய்வாளர் அறிக்கை அவர் போதைப்பொருள் வைத்திருக்கவில்லை என உறுதிப்படுத்தியதை அடுத்து, நீதிமன்றம் அவரை விடுவித்தது.
தெஹிவளை பொலிஸாரின் ஐந்து போதைப்பொருள் வழக்குகளிலும் ஆதாரமின்மை காரணமாக சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டனர். தவறுதலான கைதுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அப்பாவி மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றன என சங்கத்தின் செயலாளர் கீர்த்தி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
