இலங்கையின் பொகவந்தலாவை பகுதியில் சட்ட விரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சுற்றி வளைப்பினை மேற்க்கொண்டு இவர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மாணிக்ககல் அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களோடு மூவர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை தொடர்ந்து குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
