Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருள் அற்ற நாடாக கட்டியெழுப்பு சகலரும் கைகோர்க்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

செப்டம்பர் 7, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

ஒரு ஊழல், மோசடி, போதைப்பொருள் அற்ற தூய்மையான நாடாக கட்டியெழுப்பு வதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்காக எங்களுடன் இளைஞர் யுவதிகள் கைகோர்க்குமாறு மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் பிரதி தலைவரும் ஊடக பேச்சாளரும் சமூக செயற்பாட்டாளருமான அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் அங்குராப்பணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) பாலமீன்மடுவில் ஆரம்பிக்கப்பட்டது அதன் தலைவராக ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் முத்துலிங்கம்; செயலாளர் ஜேம்ஸ் ரூபசேன, பிரதி தலைவரும் ஊடக பேச்சாளரும் சமூக செயற்பாட்டாளருமான அந்தனிசில் ராஜ்குமார் நியமிக்கப்பட்டனர் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்தில் ஊழல், மோசடி, போதைப்பொருள் வியாபாரம், தொடர்பாக முக்கியமாக இருக்கும் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர வேண்டிய தேவையின் அடிப்படையில் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

எனவே பொது மக்கள் இந்த ஊழல் தொடர்பாக எங்களிடம் முறைப்பாடு செய்வதற்கு வெகு விரைவில் அலுவலகம் ஒன்றை திறக்கவுள்ளோம். இதில் எந்த விதமான அரசியல் சார்ந்த அரசியல் செயற்பாடுகளும் இல்லை இது முற்று முழுதாக அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களின் நலன் சார்ந்த ஒரு ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தி உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து ஊழலை தடுப்பதற்காகவே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

இன்று இந்த அமைப்பு உருவாக்கி தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை அரச திணைக்களங்கள் லீவு நாளில் வன பரிபாலன சபை அரச வாகனத்தை எடுத்துக்கொண்டு மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வழியிலே பாலமீன்மடு வில் அமைந்துள்ள ஒரு தென்னந் தோட்டத்தில் திணைக்களத்தின் சீருடையை அணிந்து கொண்டு இருவர் மதுபானங்களை எடுத்து கொண்டு வந்து அருந்திவிட்டு நிறை வெறியில் அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர் இது வீதியில் பயணிக்கும் மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் செயல்.

எனவே அரச வாகனத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாது மதுபோதைக்கு பயன்படுத்திய இரு அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அரச வாகனத்தை மக்கள் வரிப்பணத்தில் அதற்கு எரிபொருளை நிரப்பி அரச வாகனத்தில் மதுபானங்களை கொள்வனவு செய்து அரச சொத்தை வீணடித்து வரும் இவ்வாறான சில அரச திணைக்கள ஊழல் மோசடி அரச சொத்தை துஷ்பிரயோகம் செய்யும் உத்தியோகத்தர்கள் தொடர்பாக வெளி கொண்டு வருவதன் மூலம் இந்த மோசடிகளை தடுக்க முடியும் என்பதற்காக இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்

இன்று மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது இதனை தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது. அதேவேளை அரசாங்கம் முன்னெடுக்க இருக்கும் பாடசாலை மாணவர்களின் புத்தக பைகள் பாடசாலைக்குள் நுழையும்போது சோதனையிடும் திட்டத்தை கொண்டு வரவுள்ளது.

எனவே இலங்கையை ஒரு ஊழல் மோசடி போதை பொருள் அற்ற தூய்மையான நாடாக கட்டியெழுப்புவதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்காக ஒவ்வொரு பிரதேசத்தில் இருந்து இளைஞர் யுவதிகள் உங்கள் பிரதேசத்தில் நடக்கும் ஊழல், மோசடி. போதை வியாபாரம் போன்ற சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்பாக தகவல்களை தந்து உதவினால் நாங்கள் பொலிசாருடன் இணைந்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தீர்வினை பெற்றுத் தருவோம். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் யுவதிகள் எங்களுடன் கைகோர்க்கவும் என்றார்.

முந்தைய செய்தி பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கும் – கடற்றொழில் அமைச்சர்
அடுத்த செய்தி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற மாம்பழ திருவிழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சமகால அரசியல் நிலவரம்

ஜூலை 19, 2025
இலங்கை

நாவலப்பிட்டியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

நவம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வரி செலுத்தாவிடின் சிறை செல்ல நேரிடும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ஜூலை 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?