Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஸ்விட்சர்லாந்து ரேவ் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு: 22 வயது பெண் பலி

ஆகஸ்ட் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஸ்விட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில் உள்ள ஆராவ் நகரில் நடைபெற்ற ‘ஆராவ் ரேவ் VOL. 7′ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் அதிகாலை 2:30 மணியளவில் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

குதிரைப் பந்தய மைதானத்தில் சுமார் 3,500 பேர் திரண்டிருந்த வேளையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதால், தொடக்கத்தில் மக்கள் அதை பட்டாசு எனக் கருதி குழப்பமடைந்தனர்.

பின்னர் உடனடியாக நிலமையை உணர்ந்து நாலாபுறமும் சிதறி ஓடியும், மேடை மற்றும் அரங்குகளின் அடியில் ஒளிந்தும் மக்கள் பலர் தம் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.

இந்த எதிர்பாராத கொடூர சம்பவத்தில் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் 24 முதல் 27 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து வந்த ஆர்காவ் மாகாணக் காவல்துறை மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற மர்ம நபரைப் பிடிக்க ராணுவத்தின் சூப்பர் பூமா ஹெலிகாப்டர் மற்றும் ஜெர்மனி எல்லைக் காவல் படைகளின் உதவியுடன் தீவிர தேடுதல் இடம்பெற்றுவரும் நிலையில் ஆர்காவ் மாகாணக் காவல்துறை மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.

அசம்பாவிதங்களைத் தவிர்க்க தற்போது ஷாசென் பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் அணுக தடை விதிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி 22வது திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கைகோர்க்கும் GMOA
அடுத்த செய்தி வடக்கு சைப்ரஸில் கப்பல் கவிழ்ந்து விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிலிப்பைன்ஸில் நண்டினால் பறிப்போன உயிர்

பிப்ரவரி 12, 2026
உலகம்

ஜேர்மனியில் 150 பயணிகளுடன் தடம் புரண்ட ரயில்!

நவம்பர் 23, 2025
உலகம்விசேட செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானார் – வத்திக்கான் திருச்சபை

ஏப்ரல் 21, 2025
உலகம்

கால்பந்து வீரர் மெஸ்ஸி இந்தியாவுக்கு விஜயம்!

டிசம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?