கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் “காஞ்சிபானை இம்ரானின்” நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் சென்ற இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொய்தீன் என்பவர் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிப்பிரயோகம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் சந்தேகநபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

