Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற கடற்றொழில் சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஆகஸ்ட் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்ட கடற்றொழில் சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை (12) மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பட்டில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரவிகரன் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மேலும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள பணிப்பாளர், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள், கடற்படை அதிகாரிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை,இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையினால் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் மற்றும் மீனவர்களுக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அனுமதியை மீண்டும் வழங்குவது குறித்து ஆராயப்பட்டது.

மீன்பிடி நடவடிக்கைகளின் போது சில தொழில்களுக்கான வழங்கப்படுகின்ற பாஸ் நடைமுறை இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் குறித்த தொழில்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள கண்டல் தாவரங்களை வெட்டி கடற்றொழில் நடவடிக்கை களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் இதனால் எதிர் காலத்தில் கடலரிப்பு ஏற்படும் நிலை காணப்படுவதாகவும் எனவே குறித்த கண்டல் தாவரங்களை வெட்டுகின்ற மீனவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என கலந்து கொண்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!
அடுத்த செய்தி செம்மணி மனித புதைகுழியின் 104 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணொருவர் சடலம் மீட்பு!

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி சித்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரிய வழக்கு – வெள்ளிக்கிழமை கட்டளை!

ஜூன் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். மோட்டார் சைக்கிள்களை ஏற்றி சென்ற கனரக வாகனம் விபத்து(Video)

டிசம்பர் 18, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு.

ஏப்ரல் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?