Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய ’தரவுத் திருட்டு’ வழக்கின் முக்கிய சூத்திரதாரி, மெக்ஸிகோவில் கைது!

ஜூலை 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண வரலாற்றிலேயே மிக மோசமான தரவுத் திருட்டாகக் (Data Breach) கருதப்படும் ‘டெஸ்ஜார்டின்ஸ் மெகா மோசடி’ வழக்குடன்
தொடர்புடைய, தேடப்படும் குற்றவாளியான மாக்சிம் பாக்கெட் (Maxime Paquette), மெக்ஸிகோவில் வைத்துப் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கியூபெக் மாகாணப் பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த 40 வயதுடைய மாக்சிம் பாக்கெட், மெக்ஸிகோவின் கான்கன் (Cancún) நகரில்
வைத்து அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, கனேடிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘டெஸ்ஜார்டின்ஸ் நிதி நிறுவனம்’ மீதான சைபர் தாக்குதல் மற்றும் பல மில்லியன் டொலர் நிதி மோசடி
விசாரணைகளின் கீழ், 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவரைக் கனடாவுக்குக் கொண்டு வருவதற்கான நாடுகடத்தல் (Extradition) சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அவர் மெக்ஸிகோ சிறையிலேயே காவலில் வைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் மாக்சிம் பாக்கெட்டிற்கு எதிராகப் பல்வேறு பாரதூரமான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5,000 டொலருக்கும் அதிகமான நிதி மோசடி, அடையாளத் திருட்டு (Identity theft) மற்றும் பிறரின் தனிப்பட்ட அடையாளத் தரவுகளைச் சட்டவிரோதமாகக் கையாளுதல் ஆகிய குற்றச்சாட்டுகளை இவர் எதிர்கொண்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில், டெஸ்ஜார்டின்ஸ் வாடிக்கையாளர்களின் திருடப்பட்ட ரகசியப் பட்டியலை இவர் தன்வசம்
வைத்திருந்ததுடன், அதனைப் பல தனிநபர்களுக்கும் மற்றும் இணையத்தின் சட்டவிரோதப் பகுதியான ‘டார்க் வெப்’ (Dark Web) மூலமும் விற்பனை செய்துள்ளார் எனப் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

முந்தைய செய்தி மொன்றியல் ஒலிம்பிக் அரங்கின் உட்புறப் பகுதிகளைத் தரம் உயர்த்த, கியூபெக் அமைச்சரவை ஒப்புதல்
அடுத்த செய்தி மொன்றியலில் அதிகரிக்கும் போதைப்பொருள் மரணங்கள்: பொதுச்சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது

பிப்ரவரி 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காரை யாழில் பல இலட்ச ரூபாய்களுக்கு அடகு வைத்த கில்லாடி

பிப்ரவரி 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் மற்றும் காரைநகரில் ஆட்சி அமைத்தால் சபைகளை சிறப்பாக நடத்துவோம் – சட்டத்தரணி வி. மணிவண்ணன்

மே 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அஸ்வெசும மேல்முறையீடுகளுக்கான கால அவகாசம் ஜுலை 31ஆம் திகதிவரை நீடிப்பு!

ஜூலை 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?