Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

டொராண்டோ தடுப்புக்காவல் மையத்தில் கைதிகளைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டை மறுத்த சிரேஷ்ட சிறை அதிகாரி

ஜூலை 10, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

டொராண்டோ தெற்கு தடுப்புக்காவல் மையத்தில் (Toronto South Detention Centre) பணியாற்றும் குறித்த சிரேஷ்ட சிறை அதிகாரி ஒருவர், கைதிகளை அச்சுறுத்தியதாகவும், முறையற்ற உடல் சோதனை (Strip searches) உள்ளிட்ட சித்திரவதைகளை மேற்கொண்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
துப்பாக்கிக் கடத்தல் குற்றச்சாட்டில் ஏற்கனவே குற்றவாளியாகக் காணப்பட்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் இந்தச் சிறையில்
அடைக்கப்பட்டுள்ள ஜோசுவா ஜேம்ஸ் மால்கம்-ஈவான்ஸ் (Joshua James Malcolm-Evans) என்ற கைதியே, இந்த புகாரை நீதிமன்றத்தில் பிரமாணப்
பத்திரமாகத் தாக்கல் செய்துள்ளார்.
தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, தனக்கான தண்டனைக் காலத்தைக் குறைக்குமாறு அந்தக் கைதி கோரியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றில் முன்னிலையாகி முதன்முறையாகப் பகிரங்கமாகப் பேசிய அந்த சிரேஷ்ட சிறை அதிகாரி, தன் மீதான குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுத்துள்ளார்.
கைதிகள் மற்றும் சக ஊழியர்களுடனான தனது அணுகுமுறை எப்போதும் கண்ணியமானதாகவும், தொழில்முறை சார்ந்ததாகவும் மட்டுமே
இருந்துள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது கடுமையான கடமை உணர்வு காரணமாகவே திட்டமிட்ட குற்றக் குழுக்கள் லஞ்சம் கொடுத்து, காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் தனது வீட்டு முகவரியைப் பெற்று தன்னைக் கொல்ல முயன்றதாகவும் அந்த சிரேஷ்ட சிறை அதிகாரி, கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் இல் இந்தச் சிறை அதிகாரியின் வீட்டின் மீது ஆயுதமேந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி, அவரைக் கொலை செய்ய
முயன்ற சம்பவத்தை அடுத்தே, யோர்க் பிராந்தியக் காவல்துறை ‘புரொஜெக்ட் சவுத்’ என்ற மாபெரும் ஊழல் தடுப்புப் புலனாய்வை ஆரம்பித்தது.
இந்த விசாரணையின் மூலம், டொராண்டோ காவல்துறையின் காவற்துறை அதிகாரி திமோதி பார்ன்ஹார்ட் (Timothy Barnhardt) என்பவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இந்தச் சிறை அதிகாரியின் ரகசிய வீட்டு முகவரியை சர்வதேசக் குற்றக் கும்பல்களுக்குக் கசியவிட்டமை வெளித்தெரிய வந்தது.
இந்த விசாரணையில் இதுவரை 7 டொராண்டோ காவற்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீதான வழக்குகள் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தினுள் போதைப்பொருள்
அடுத்த செய்தி மொண்ட்ரியலின் ‘பெல்கோ’ கலைக் கட்டடத்தின் புதிய உரிமையாளர், ”அதன் பாரம்பரிய அடையாளம் பேணப்படும்” என உறுதியளிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மின்சாரம் தாக்கி ஊழியர் ஒருவர் படுகாயம்!

ஜூலை 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் . போதனா முன் கஞ்சா வியாபாரம் – ஒருவர் கைது

ஏப்ரல் 22, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் கூட்டமைப்பை உருவாக்க முயற்சித்தோம் – தமிழரசு நீலிக்கண்ணீர்

மார்ச் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மே 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?