இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,060 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
இதில் மேல் மாகாணத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 32,054 ஆகும். தென் மாகாணத்தில் 9674 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5237 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 4823 பேரும், கிழக்கு மாகாணத்தில் 2,979 பேரும், வடமேல் மாகாணத்தில் 2778 பேரும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் வடமத்திய மாகாணத்தில் 1,013 பேரும், வடமாகாணத்தில் 957 பேரும் பதிவாகியுள்ளனர்.
நாட்டில் 142 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

