Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வீதி புனரமைப்பிற்காக மூடப்படும் திருநெல்வேலி சந்தி வீதி

ஜூன் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதி பகுதிக்கு காப்பெற் இடும் பணிகள் நடைபெறவுள்ளதனால் நாளைய தினம் புதன்கிழமை மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களும் குறித்த வீதிப்பகுதியானது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படமாட்டாது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் அறிவித்துள்ளார்.

அது தொடர்பில் தவிசாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இப் பிரதேசத்தின் மிக நீண்ட காலப் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதியின் புனரமைப்பு பணிகள் நல்லூர் பிரதேச சபையினால் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இச் செயற்றிட்டத்தின் முக்கிய கட்டமாக குறித்த பகுதிக்கு காப்பெற் இடும் பணிகள் நாளைய தினம் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை (11.06.2026) ஆகிய இரு நாட்களும் இடம்பெறவுள்ள நிலையில் பின்வரும் விடயங்களை இப்பிரதேசத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

இரு தினங்களும் குறித்த வீதிப்பகுதியானது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படமாட்டாது.

தங்களது வியாபார நிலையங்களுக்கு முன்னால் எந்த ஒரு வாகனங்களும் நிறுத்தப்படல் ஆகாது

காப்பெற் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் குறித்த வீதிப்பகுதியானது உயர் அழுத்தம் கொண்ட காற்றுப் பம்பிகளைக் கொண்டு சுத்தம் செய்யபடும்.

அவ்வாறு சுத்தம் செய்யப்படும் போது எழுகின்ற தூசி மண்டலத்திருந்து தங்களது வியாபார நிலையங்களையும் வியாபர பொருட்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கு பொருத்தமான தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்

முக்கியமாக உணவுக் கடைகள் சுகாதார சீர்கேடுகள் ஏற்படாத வண்ணம் தங்கள் வியாபார நிலையங்களின் சுகாதாரம் இது தொடர்பில் மிகக் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

தங்களுடைய வியாபார நடவடிக்கைகளுக்கு மிக நீண்ட கால இடையூறு ஏற்படாத வண்ணம் ஒரு திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக இச் செயற்றிட்டம் இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளது.

இதுவரை நாளும் தாங்கள் வழங்கிய ஒத்துழைப்பு போன்று இவ்விறுதிக் கட்டப்பணிகளுக்கும் தங்களுடைய பூரண ஒத்துழைப்பினை தந்துதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி செம்மணியில் இன்று 08 சிறுவர்களின் என்பு கூடுகள் உட்பட 09 என்பு கூடுகள் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது

அக்டோபர் 25, 2025
இலங்கை

காரைதீவில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி -பொது மக்களிடம் கையளிப்பு!

அக்டோபர் 11, 2025
இலங்கை

இணுவில் இளைஞனை தாக்கிய சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

பிப்ரவரி 19, 2025
இலங்கை

நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது

ஜனவரி 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?