Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

ஆண்ட்ரி பெடுஹோவ்(Andrei Petuhov) கொலை வழக்கில் இரண்டாவது சந்தேக நபரும் குற்றவாளியாக அறிவிப்பு

ஜூன் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில், கடந்த 2023-ஆம் ஆண்டு, இரு பிள்ளைகளின் தந்தையான ஆண்ட்ரி பெடுஹோவ் (Andrei Petuhov) கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய இரண்டாவது நபரும், தற்போது நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மொன்றியலின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றான ஆரஞ்சு ஜூலப் (Orange Julep) உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில், இந்தக் கொலைச்சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவம் 2023-ஆம் ஆண்டில் மொன்றியலில் நிகழ்ந்த 10-ஆவது கொடூரக் கொலைச் சம்பவமாகப் பதிவாகியிருந்தது. அந்த குடும்பத்தலைவர் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்தின், பிரதான குற்றவாளியும் பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீரருமான இஸ்மாயில் கரோய், இந்தத் தாக்குதலை நடத்திய பின்னர் காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பிப்பதற்காக ஐரோப்பாவுக்கு தப்பிச்சென்றார். மொன்றியல் மாநகரக் காவல் துறையின் (SPVM) பெரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இவருக்கு எதிராக, சர்வதேச அளவிலான பிடியாணையைப் பெற்றனர்.

தீவிரத் தேடுதலின் பலனாக, கடந்த ஆண்டு பிரெஞ்சு அதிகாரிகளால் பிரான்சில் வைத்து இஸ்மாயில் கரோய் கைது செய்யப்பட்டார். நீண்ட இராஜதந்திர மற்றும் சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர், அவர் பிரான்சில் இருந்து அதிகாரப்பூர்வமாகக் கனடாவுக்கு நாடுகடத்தப்பட்டு, கனடாவுக்குள் கொண்டுவரப்பட்டார்.

பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இஸ்மாயில் கரோய் தற்போது குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்துமீறிய மனிதப்படுகொலை (Involuntary Homicide) மற்றும் தாக்குதல் முதலான குற்றச்சாட்டுகள், நீதிமன்றத்தில் அவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. இஸ்மாயில் கரோய் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரண்டு ஆண்டுகளின் பின்னர் கிடைத்துள்ள மிக முக்கியமான நீதியாகக் கருதப்படுகிறது.

முந்தைய செய்தி அரசு பள்ளிகளில் செல்போன் தடை சட்டத்தைத் தொடர்ந்து வீடுகளில் புதிய சிக்கல்
அடுத்த செய்தி மத்திய அரசின் தலையீட்டை எதிர்க்கும் கியூபெக் மற்றும் அல்பர்ட்டா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

செப்டம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்

ஜனவரி 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஜனவரி 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு நகர உணவக நிர்வாகிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு

மே 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?