கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் இருந்து பார ஊர்தி ஒன்றின் மூலம் அனுமதி பத்திரம் எதுவும் இன்றி 22 கால்நடைகளை 23.05.2026 இரவு கொண்டு சென்ற போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைவாக முகமாலை பகுதியில் வீதி சோதனையின் மூலம் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதுடன் 22 கால்நடைகளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
குறித்த பார ஊர்தியின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கால்நடைகளை கொண்டு சென்ற பொழுது சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதிப்பத்திரம் இன்மை, கால்நடை வைத்தியரின் அனுமதி பத்திரம் இல்லாமல் மற்றும் கால்நடைகளைக் கொண்டு செல்வதற்கான இட வசதிகள், சுகாதார வசதிகள் இன்மை மற்றும் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான வழித்தட அனுமதிப்பத்திரம் போன்றவை காரணமாக குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்
26.05.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
