மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தனியார் போக்குவரத்து பேரூந்து தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இரு புடவைக்கடைகள் ஒரு இலத்திரனியல் கடை உட்பட அருகருகே இருந்த 3 கடைகளை திருடர்கள் உடைத்து அங்கிருந்து பல இலச்சம் ரூபா பணம் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் நேற்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முக்கிய சந்திகள் மற்றும் வீதிகளில் பொலிசார் இரவு பகலாக பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தனியார் பேருந்து வண்டிகள் நிறுத்தும் பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னாள் உள்ள இரு புடவைகடை ஒரு இலத்திரணியல் மற்றும் கைதோலைடீபசிகள் விற்பனை செய்யும் கடைகளின் பூட்டை அலவாங்கால் உடைத்து கடைகளுக்குள் திருடர்கள் உட்சென்றுள்ளனர்.
அங்கிருந்து மேசை இலாச்சிகளை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் இலத்திரனியல் பொருட்களை திருடியுள்ளனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்-
