பிரித்தானியாவில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று வளாகத்தில் தமிழினப் படுகொலையின் 17 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ( மே 18) மாலை 5 மணிக்கு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது
கடந்த 2009 ம்ஆண்டு தமிழ்மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப் படுகொலையில் 17 ம் ஆண்டு நினைவுகளை சுமந்து உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் முன்னாள் போராளிகள் உட்பட புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுதிரண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
