உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 180 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 179 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவம் தொடர்பில் ஒரு முறைப்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடுகளில் 133 முறைப்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், ஏனைய 47 முறைப்பாடுகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.