யால தேசிய பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையில் வன விலங்கொன்றின் இறைச்சியை வைத்திருந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது எருது இறைச்சி 92 கிலோகிராமும், இரண்டு சைக்கிள் மற்றும் உள்நாட்டு கைத்துப்பாக்கி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் கைதான இருவரும் கதிர்காமம், ஹப்புத்தளை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் அதிரடிப்படை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
