Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் தனியார் பேருந்துகளுக்குத் தேவையான டீசலை பெற்றுக் கொள்ள விசேட ஏற்பாடு

மார்ச் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாணத்தில் சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகளுக்குத் தேவையான டீசலை, எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் ‘கியூ.ஆர்’ (QR) முறைமை ஊடாகப் பெற்றுக்கொள்ளக் கூடிய விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய நெருக்கடியான சூழலைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்தால் எரிபொருள் விநியோகத்தில் சில கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், பொதுப்போக்குவரத்துச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர வேண்டும் என்பதற்காக, ஆரம்பத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மாத்திரம் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும், நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர்களின் வசதி கருதி, தற்போது வடக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் அவர்கள் தமக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய ஏற்பாடுகளை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமைவாக, ஒவ்வொரு தனியார் பேருந்தினதும் வழித்தட அனுமதியை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் இருவழிப் பயணத்துக்குத் தேவையான எரிபொருளின் அளவு துல்லியமாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பீட்டுக்கு அமைய ஒவ்வொரு பேருந்துக்குமான உரிய எரிபொருள் ஒதுக்கீடு தீர்மானிக்கப்பட்டு, தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அதற்கான விசேட ‘கியூ.ஆர்’ வழங்கப்படும்.

அந்த ‘கியூ.ஆர்’ குறியீட்டைப் பயன்படுத்தி, அவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட டீசலை எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் இனிவரும் காலங்களில் தடையின்றிப் பெற்றுக்கொள்ள முடியும்’ என மேலும் தெளிவுபடுத்தினார்.

முந்தைய செய்தி யாழில். அடையாள அட்டை இன்றி கடைக்கு சென்றவர் கைது
அடுத்த செய்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நிலவும் கடுமையான வெப்பநிலை குறித்து எச்சரிக்கை!

பிப்ரவரி 17, 2025
இலங்கை

யாழில். பனை அபிவிருத்தி தொடர்பில் விசேட சந்திப்பை மேற்கொண்ட பிரதி அமைச்சர்

பிப்ரவரி 10, 2026
இலங்கை

அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம் – ரஞ்சித் மத்தும பண்டார

மார்ச் 14, 2026
இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் பதிவு!

செப்டம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?