Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பழைய பூங்கா கட்டுமானத்திற்கு மீண்டும் தடை

மார்ச் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கு இடைக்காலத் தடையை நீடித்து மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. இரண்டு நீதிபதிகளைக் கொண்ட ஆயம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இந்த உத்தரவை விடுத்திருக்கின்றது.

யாழ். பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கைப் பரிசீலித்த யாழ். மாவட்ட நீதிமன்றம், முதலில் அந்தக் கட்டுமானத்துக்கு எதிராக இரண்டு வார கால இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை வழங்கி இருந்தது. எனினும் பின்னர் அந்த இரண்டு வார காலம் முடிவடைந்ததும், இடைக்காலத் தடை உத்தரவை நீடிக்காமல் கட்டளையை வழங்கி இருந்தது.

அதற்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் வடக்கு மாகாண மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடும், மீளாய்வு முறையீடும் செய்யப்பட்டன. அந்த இரண்டு மனுக்களையும் மேன் முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதாடியிருந்தார்.

இந்த விவகாரத்தை ஒட்டி தன்னுடைய கட்டளையை மேன்முறையீட்டுக்கான மேல்நீதிமன்றம் வழங்கி இருக்கின்றது. இந்த மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை மேற்படி கட்டுமானத்துக்கு எதிரான இடைக்காலத் தடை தொடர்ந்து நீடிக்கும் என்று மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் தன்னுடைய இன்றைய உத்தரவில் தெளிவாகக் கட்டளை பிறப்பித்திருக்கின்றது.

இந்த மீளாய்வு மனுத் தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு அளித்து எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.அன்றைய தினம் மேன்முறையீட்டு மனுவும் தொடர்ந்து விசாரணைக்கு முன்னெடுப்பதா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக மன்றில் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

முந்தைய செய்தி லண்டனில் மன்னர் சார்லஸைச் சந்திக்கிறார் பிரதமர் மார்க் கார்னி
அடுத்த செய்தி வடமராட்சியில் கொலைக்கு உதவிய தந்தையும் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம்.

பிப்ரவரி 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய பாடசாலை குறித்து பிரதமர் கூறியது தவறு – சர்வேஸ்வரன்

ஜூன் 6, 2025
இலங்கை

சாவகச்சேரியில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

ஆகஸ்ட் 17, 2025
இலங்கை

கொழும்பு பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு

அக்டோபர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?