வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119வது மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
இரண்டு கல்லூரிகளின் கீதத்துடன் சம்பிரதாயபூர்வமாக வீரர்களின் அறிமுகத்துடன் போட்டி ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி சென்ஜோன்ஸ் கல்லூரி துடுப்பெடுத்தாடி வருகிறது.
குறித்த போட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது.
இதேவேளை இரண்டு கல்லூரிகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் 23வது மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் கொண்ட ஒரு நாள் போட்டி மார்ச் 14ம் திகதி யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
