தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில், ஆளும் திமுக மற்றும்
காங்கிரஸ் கட்சிகள் இன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தின்படி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், ஒரு ராஜ்யசபா சீட் அக்கட்சிக்கு ஒதுக்கப்படும்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கடந்த சில வாரங்களாக இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வந்த இழுபறிநிலை, இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரசுக்கு, இந்த முறை கூடுதலாக 3 இடங்கள் வழங்கப்பட்டு, மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
