களுத்துறையில் உள்ள இறப்பர் உற்பத்தி நிறுவனத்தின் களஞ்சியசாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயினால் இறப்பர் உற்பத்தி பொருட்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்த முச்சக்கரவண்டி ஒன்றும் உந்துருளி ஒன்றும் தீயில் கருகியுள்ளது.
இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீவிரமாக செயற்பட்டதுடன், பிரதேச மக்களும் தங்களின் ஒத்துழைப்பை வழங்கினர்.
மேலும் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
