பெருந்தோட்ட துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு அண்மையில் வேதன உயர்வு வழங்கப்பட்டது. தற்போது இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் கொட்டகலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.
தொழிலார்களின் லயன் குடியிருப்பு மற்றும் அவர்களின் வாழ்வியல் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியுமா? உங்களால் இவற்றை வந்து அவதானிக்க முடியுமா? அவர்கள் அன்றாடம் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகள் என்னவென்று வந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.
இந்த மக்களுக்கு வேதனத்தை அதிகரித்தீர்கள், அந்த வேதன அதிகரிப்பிற்கான உடன்படிக்கையை பகிரங்கப்படுத்துங்கள்.
தனியார் நிறுவனங்களோடு எட்டப்பட்ட குறித்த உடன்படிக்கை தற்போது வரை பகிரங்கப்படுத்தப்படவில்லை, இதனால் எங்களுக்கு பெரியளவான சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என கூறியுள்ளார்.
