நாட்டில் மின்னலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்கள் மற்றும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (14) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும்.
அதன்படி, மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்கள் மற்றும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
