வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய ஆரம்ப பாடசாலைக்கான ஒன்றுகூடல் மேடை இன்றையதினம் 2003ம் ஆண்டு உயர்தரம் கற்ற மகாவத்தியன்களினால் பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரனிடம் சம்பிரதாய பூர்வமாக கையளித்து வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து, பேன்ட் வாக்கியம் முழங்க அழைத்து வரப்பட்டிருந்ததுடன், நாடா வெட்டி குறித்த மேடை திறந்து வைக்கப்படடிருந்தது.
இந்நிகழ்வில் அதிபர் ஆ.லோகேஸ்வரன், பழைய மாணவர் சங்க தலைவர் க.ஹரிப்பிரசாத், மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், 2003ம் ஆண்டு உயர்தரம் கற்ற மகாவித்தியன்கள், ஆரம்ப பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த ஒன்று கூடல் மேடையானது இரண்டு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
