நல்லூர் சிவன் கோவிலில் திருவெம்பாவை திருவிழாவின் புட்டு திருவிழா நேற்றைய தினம்(30) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்து வைகையின் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தியதாக நம்பிக்கை நிலவுகின்றது. அதனை பிரதிபலிக்கும் வகையில் இந்த புட்டு திருவிழா திருவெம்பாவை திருவிழாவின் போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


