கடந்த 22 ஆம் திகதி நுகேகொடை, கொஹுவல சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதன்படி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த போதே நேற்று(25) இரவு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் போதைப்பொருள் கடத்தல்காரரான அவிஷ்கவின் நெருங்கிய சகா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


