மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நிதிப் பங்களிப்பில் 2ம் கட்ட நிவாரணப் பணியாக மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட 38 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (19) மன்னார் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 38 மாணவர்களுக்கு பாடசாலை சப்பாத்து, புத்தகப்பை, கொப்பிகள், பேனைகள், பென்சில்கள் கொம்பாஸ் ,சாப்பாட்டு பெட்டி உள்ளடங்களாக பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.


