அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நவீட் அக்ரம் மீது 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பொண்டி பொலிஸார் தெரிவித்துள்ளள்ளனர்.
நவீட் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு பயங்கரவாதச் செயல் புரிந்தமை உட்பட மொத்தம் 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் 1996 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
