கொக்குத்தொடுவாய் 15ஆம் கட்டையில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை, கொக்கிளாய் முகத்துவாரத்தில் அத்துமீறிக் குடியேறியிருக்கும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமிப்புச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுப்பதற்கு கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் உள்ளிட்ட உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், தாம் களத்தில் இறங்கி அபகரிப்பு முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
