கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவி கிராமத்தில் வசிக்கும் கண்டாவளை பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டார்.
காய்ச்சலுக்கு தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றபோது இவரின் குருதி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலேயே எலிக்காய்ச்சல் இருப்பது இனங்காணப்பட்டது.
இந்நிலையில் குறித்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வெள்ள நிலைமையைத்தொடர்ந்து எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார பிரிவினர் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

