மீட்பு பணிகள் இடம்பெறும் பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை அனைத்து ட்ரோன் புறப்பாடுகள் மற்றும் தரையிறக்கங்கள் பற்றிய தகவல்களை 0112343970, 0112343971 அல்லது 115 ஆகிய துரித இலங்களின் ஊடாக முன்கூட்டியே அறிவிக்குமாறும் இலங்கை விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.
உரிய அனுமதிகள் இன்றிப் பறக்கவிடப்படும் ட்ரோன்கள் அத்தியாவசியமான மீட்புப் பணிகளுக்கான விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் விமானப்படை எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
