வெலிமடை – ரேந்தப்பொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்ட இரு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இதேவேளை மண்சரிவில் புதையுண்டவர்களின் எண்ணிக்கை 10 என சந்தேகிக்கப்படுகிறது.
வெலிமடை ரேந்தப்பொல மண்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை இராணுவம், பொலிஸார் மற்றும் ஊர்மக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை, 6 கிலோமீற்றர் கீழே இறங்கியுள்ள நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினரும் ஊர்மக்களும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்புக் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் செல்வதில் பெரும் பிரச்சனையாக உள்ளது .அந்த இடத்தை பார்வையிட பொது மக்கள் செல்வதை தடுக்க பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


