Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் 4594 பேர் பாதிப்பு!

நவம்பர் 30, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE
முல்லைத்தீவில் 1550 குடும்பங்களை சேர்ந்த  4594 பேர் 42 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலமைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஊடகங்களுக்கு இன்று (30) கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்….
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப்பெருமளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் பாதிக்கப்பட்டு  42 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
2000 த்திற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 5400 பேர் வரை உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் இருக்கின்றார்கள்.
இந்த கணக்கெடுப்பு முழுமையாக எடுக்கவில்லை காரணம் முல்லைத்;தீவு மாவட்டம் முற்றாக தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடற்த 28ம் ,29 ஆம் திகதிகளில் மின்னசாரம் தொலைத்தொடர்பு இல்லை (இன்றுதான் (30) மின்சாரம் தொலைத்தொடர்புகள் சற்று சீர்செய்யப்பட்டு வருகின்றன)
தற்போது தொலைத் தொடர்பு வசதிகள் சீர்செய்யப்பட்டாலும் முழுமையாக தொலைத் தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை
முல்லைத்தீவு மாவட்டத்தில் 30ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 90ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இயல்புநிலை மிகமோசமாக பதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
45ஆயிரம் ஏக்கர்  விவசாய நிலங்கள் முற்றாக வெள்ள்தில் மூழ்கியுள்ளதால் அவை முற்றாக அழிவதற்கான வாய்ப்புக்கள் உள்ளாகியுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தில் முக்கியமான குளங்கள் வான்பாய்கின்றன முத்தையன்கட்டு,வவுனிக்குளம்,தண்ணிமுறிப்பு குளம்,வான்பாய்கின்றன.
மிகமுக்கியமாக மக்களின் போக்குவரத்து பலஇடங்களில் தடைப்பட்டுள்ளது குறிப்பாக கிளிநொச்சியில் இருந்து பரந்தன் ஊடான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இரண்டு பாலங்கள் சேதமடைந்துள்ளது. நாயாறுபாலம் உடைந்துள்ளதால் இந்த வீதி ஊடாக கொக்குளாய்,வெலிஓயா போன்ற இடங்களுக்கு செல்லமுடியாத நிலை இருக்கின்றது இடம்பெயர்ந்து முகாம்களில் வசிப்பவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது பல தரப்பினரின் ஒத்துளைப்புடன் வழங்கப்பட்டு வருகின்றது.
மின்சாரம் நேற்று (29) பிற்பகல் தொடர்கம் மின்சாரம் கிடைத்து வருகின்றது தொலைத்தொடர்பு வசதிகள் இதுவரை முழுமைபெறவில்லை முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 23 விவசாயிகள் காணாமல் போயுள்ளார்கள் நேற்று (29) மாலை திரும்பிவந்துள்ளார்கள் இருந்தும் நித்தகை குளம் புனரமைப்பிற்காக வேலைசெய்வதற்காக வந்த இருவர் தற்போதும் அந்த பிரதேசத்தில் வெள்ளத்தில் சூழ்ந்து இருக்கின்றார்கள் அவர்களை மீட்பதற்கான  நடவடிக்கைகள் கடினமாக இருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் கமநல சேவைக்குட்பட்ட கோடாலிக்கல்லு குளம் முற்றுமுழுதாக சேதடைந்துள்ளதுடன் வட்டுவாகல் பாலத்தின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நாயாறு பாலம் தற்காலிகமாக திருத்துவதற்கு நான்குவரையான நாட்கள் எடுக்கும் என வீதிஅபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது இருந்தாலும் நாயாறு பாலம் புதிதாக அமைக்கவேண்டிய தேவை உள்ளது.
வட்டுவாகல் பாலம் ஏற்கனவே புனரமைப்புபணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த பதையூடான போக்குவரத்து சில நாட்களில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
முந்தைய செய்தி யாழில். பட்டப்பகலில் இளைஞன் வெட்டி கொலை!(video இணைப்பு )
அடுத்த செய்தி மன்னாரில் நீரில் மூழ்கிய ரோலர் படகுகளை மீட்கும் பணி ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில்.13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றத்தில் தாய் கைது.

பிப்ரவரி 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொரளையில் துப்பாக்கிச் சூடு சம்பவம்!

ஆகஸ்ட் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் தேசியப் பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய தரப்புக்களிடையேயான ஒப்பந்தம் கைச்சாத்து !

ஜூன் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் தொலைபேசி கம்பத்தோடு மோதிய வேன்…

ஏப்ரல் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?