அவுஸ்திரேலியாவிற்கு அடுத்து மலேசியாவிலும் 16 வயதிட்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.
அண்மைக்காலமாக பல நாடுகள் இது குறித்து பேசி வர நிலையில் தற்போது மலேசிய அரசாங்கமும் மறுபரிசீலனை செய்து வருவதாக மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் நேற்றையதினம் (23) தெரிவித்திருந்தார்.
இதன்படி சிறுவர் துஷ்ப்ரயோகம், சைபர்புல்லிங் மற்றும் நிதி மோசடிகள் போன்றவற்றிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க இந்நடவடிக்கை மிக அவசியம் என தெரிவித்தார்.
மேலும் அரசாங்கம் எடுக்கும் முடிவை சமூக ஊடக தளங்கள் அடுத்த ஆண்டுக்குள் பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


