மொரட்டுவை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 14 வயதுடைய மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன், இதனை மூடிமறைக்க முயற்சித்த அதிபரும் நேற்றைய தினம் திங்கட்கிழமை (17) மாலை மொரட்டுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் பதுரெலிய மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடையவர்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மீது இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்க் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


