மீட்டியாகொடை – கிரலகாவெல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
உணவகம் ஒன்றுக்கு அருகில் இன்றிரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மீட்டியாகொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


