Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அரச எதிர்ப்புப் பேரணி குறித்து மஹிந்தவின் பகிரங்க முடிவு!

நவம்பர் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள அநுர அரசுக்கு எதிரான பேரணியில் தான் பங்கேற்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த அரச எதிர்ப்புப் பேரணியில் தான் பங்கேற்காதமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தங்காலையில் தினமும் என்னைப் பார்க்க வரும் மக்களைத் தவறவிட முடியாது என்பதாலும், தங்காலையில் இருந்து நுகேகொடை வரை பயணம் செய்வதில் கூடுதல் நேரத்தைச் செலவிட வேண்டியிருப்பதாலும் நுகேகொடையில் நடைபெறவுள்ள அரச எதிர்ப்பு பேரணியில் நான் பங்கேற்கமாட்டேன்.

இருப்பினும், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. இந்தப் பேரணியை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நிகழ்வில் நான் பங்கேற்காதது சிலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். – என்றார்.

எனினும், எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள அரச எதிர்ப்புப் பேரணியில் மக்களைத் திரட்டும் நோக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. நேற்றுமுன்தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளால் நுகேகொடையில் நடத்தப்படும் அரச எதிர்ப்புப் பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறியிருந்தார்.

முந்தைய செய்தி பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!
அடுத்த செய்தி தாளையடி கடற்பகுதிக்கு வருபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு !

செப்டம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 5 மே 2025

மே 5, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நாங்கள் உக்ரைனுடன், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் துணை நிற்போம்-இங்கிலாந்து பிரதமர் கெய்ர் உறுதி !

மார்ச் 3, 2025
இலங்கை

மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்

ஆகஸ்ட் 31, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?