கலென்பிந்துனுவெவவில் உள்ள ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் இருந்து பெருமளவிலான தோட்டாக்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
T-56 ரகத் தோட்டாக்கள் 21ம் மற்றும் MPMG ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் 33 தோட்டாக்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் மேலதிகமாக, 9MM பிஸ்டல் ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் வெற்றுத் தோட்டாக்கள் 118ம், ஒரு புகைக் குண்டும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹுருளுவெவவில் குளிப்பதற்காக வந்த இரு இளைஞர்கள் இந்த தோட்டாக்களைக் கண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த இடத்தைச் சோதனையிட்டு இந்த தோட்டாக்களை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
