பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை குழு நடத்திய சிறப்பு சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 196 கிலோகிராம் 218 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொம்பேவைச் சேர்ந்த 44 வயதான சந்தேக நபர், இலங்கை விமானப்படையின் முன்னாள் பைலட் சார்ஜென்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் இரத்மலானை விமானப்படை தளத்தில் பணியாற்றி 2022 ஜனவரியில் ஓய்வு பெற்றவர் ஆவார்
சந்தேக நபர், நீதிமன்ற உத்தரவின் கீழ் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வரும் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் உறவினர் என்பதும் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
