டார்ஜிலிங்கில் மலைகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.
மண்சரிவினால் பல வீடுகள் அடித்துச்செல்லப்பட்தோடு 24 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப்படை, பொலிஸார் உள்ளிட்ட குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், டார்ஜிலிங்கில் கனமழை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
கனமழை மற்றும் மண்சரிவுகளைத் தொடர்ந்து டார்ஜிலிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்களளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
