இபலோகமவின் கொன்வேவா பகுதியில் ஒரு மாத பெண் குழந்தை தனது தாயாரால் ஒரு பையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார அதிகாரி இந்திராணி அனுலாவின் வீட்டின் முன் ஒரு நாற்காலியில் குழந்தை விடப்பட்டிருந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது.
காலை 6.00 மணியளவில் முன் கதவைத் திறந்தபோது, சந்தேகத்துக்கிடமான முறையில் பையொன்று கண்டுபிடித்ததாகவும், அது அசைவதைக் கண்டதாகவும் தாதி கூறினார்.
அதைத் திறந்தபோது, குழந்தை பைக்குள் இருப்பதாகவும், குழந்தை ஒரு மாதத்திற்கு முன்பு பிறந்ததற்கான மருத்துவ அட்டை இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தை நிகவெரட்டிய அடிப்படை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த குறித்த தாதி,
“நான் மூன்று வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஒரு அனுபவம் வாய்ந்த குடும்ப சுகாதார அதிகாரி. குழந்தை எடை குறைவாக இருப்பதை உணர்ந்தேன். பால் பாட்டில், துணிகள் மற்றும் பால் பவுடர் பாக்கெட் உட்பட குழந்தையின் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பையில் இருந்தன. இருப்பினும், தாயின் பெயர் மற்றும் பிறந்த இடம் அட்டையிலிருந்து அழிக்கப்பட்டிருந்தது. பின்னர் நான் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தேன்,” என்று அவர் கூறினார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
