Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

லவால் ஸ்டார்பக்ஸ் கடையில் திடீர் துப்பாக்கிச் சூடு

அக்டோபர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள லாவல் நகரில் பரபரப்பான வணிக வளாகத்தில் இயங்கி வந்த ஸ்டார்பக்ஸ் (Starbucks) கடையில் பகல் நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சட்டவிரோத குற்றவியல் குழுவுடன் தொடர்புடைய ஒருவர் கொல்லப்பட்டார்.

இதன்போது மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இது ஒரு திட்டமிட்ட கொலைக்கான (Planned Hit) அனைத்து அறிகுறிகளையும் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவர் சட்டவிரோதக் குற்றவியல் குழுவின் முக்கிய நபராகக் கருதப்படும் சரலாம்போஸ் தியோலோகு (Charalambos Theologou)
ஆவார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மற்ற இரண்டு நபர்களும், உயிரிழந்த தியோலோகுவின் குழுவான ‘சோமடி கிரீக்ஸ்& (Chomedey Greeks)
கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று காலை 10:30 மணியளவில், லாவல் நகரில் உள்ள நெடுஞ்சாலை 440 சேவைச் சாலையின் (Highway 440 service road)
மூலை மற்றும் 100வது அவென்யூவில் அமைந்திருந்த ஸ்டார்பக்ஸ் கடையில் நடைபெற்றது. அழைப்பு வந்ததையடுத்து லாவல் காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ஸ்டார்பக்ஸ் மற்றும் அதனைச் சுற்றியிருந்த உணவகங்கள் மற்றும் கடைகள் நிறைந்த அந்த வளாகத்தில் பலபொதுமக்கள் இருந்தனர்.

இந்த குற்றச்செயல் தொடர்பில் லாவல் காவல்துறையினர் நெடுஞ்சாலை 440 அருகே ஒரு தேடுதல் நடத்தி வருவதை உறுதிப்படுத்தினர். கியூபெக் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இயன் லாஃபிரேனியர் (Ian Lafrenière) செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தத் துப்பாக்கிச் சூடு சட்டவிரோதக் குற்றவியல் குழுவுடன் தொடர்புடைய இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என்று கூறினார்.

சட்டவிரோதக் குற்றவியல் குழுக்கள் மீதான அழுத்தம் தொடரும் என்று அமைச்சர் லாஃபிரேனியர் உறுதியளித்தார்.

முந்தைய செய்தி மாவட்ட செயலக நவராத்திரி விழா!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ நகரில் விமான விபத்து

செப்டம்பர் 16, 2025
1
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசோடு கைகோர்க்கும் வியட்நாம்….

ஏப்ரல் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

பொதுத் தேர்தல் தொடர்பான புதிய அறிக்கை வெளியாகியுள்ளது

அக்டோபர் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாகாண நியமனங்களுக்கான அழைப்பு வெளியாகியுள்ளது

ஜூலை 14, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?