Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்துறை மருத்துவ முகாம்!

செப்டம்பர் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இராணுவ வீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நடாத்தப்பட்ட பல்துறை மருத்துவ முகாம்களின் 7 வது கட்டம் இன்று (19) அம்பாறை, கொண்டுவட்டுவான் இலங்கை இராணுவ போர் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வசிக்கும் காயமடைந்த போர்வீரர்கள், வீரமரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற வீரர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் உட்பட 1250 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

போர் வீரர் விவகாரம் மற்றும் புணர்வாழ்வு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மருத்துவ முகாமில், மருத்துவப் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வுகளை வழங்குதல், தொழில்சார் சுகாதார ஆலோசனை, மனநல ஆலோசனை, பல் வைத்திய சேவைகள், நடமாடும் மருத்துவ ஆய்வக சேவைகள், செயற்கை கால்கள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்குவதற்கான பரிசோதனைகள், நடமாடும் கண் மருத்துவ பரிசோதனை, பிசியோதெரபி மருத்துவமனைகள் மற்றும் பல சேவைகள் வழங்கப்பட்டன.

உயிர்நீத்த போர் வீரர்களின் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள், போரில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினரின் பிரச்சினைகளையும் ஆராய ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், காயமடைந்த போர் வீரர்களுக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், மூக்குகண்ணாடிகள் மற்றும் தேவையான அறுவை சிகிச்சை உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன.

மேலும் இதற்கு இணையாக பாதுகாப்பு அமைச்சு, ரணவிரு சேவைகள் ஆணையம் மற்றும் இராணுவ பணிப்பகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளால் போர்வீரர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் நிலம், வீட்டுவசதி, சம்பளம் மற்றும் ஏனைய நிர்வாக பிரச்சினைகள் குறித்து தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

முந்தைய செய்தி கனகராயன்குளம் பகுதியில் விபத்தில் சிக்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி இந்தியாவில் அதிகரித்து செல்லும் கோடீஸ்வர குடும்பங்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் சட்டவிரோத கணிய மணல் அகழ்வு தொடர்கின்றது – டானியல் வசந்

ஏப்ரல் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்!

ஜூலை 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கைது -லண்டன் அழைப்பிதழை அதிகாரப்பூர்வமாக வெளியீட்ட ஐக்கிய தேசியக் கட்சி!

ஆகஸ்ட் 22, 2025
இலங்கை

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

டிசம்பர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?