கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய மோகனபவன் வனிதா என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு சிகிச்சை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 09.09.2025 அன்று வைத்தியசாலை செல்வதற்காக உறவினருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், திடீரென ஏற்பட்ட ஏற்பட்ட சுகையீனம் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி 11.09.2025 அன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக தெரிவித்துள்ளார்.
